ADDED : அக் 17, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கொரோனா காலகட்டத்தில் பள்ளி விடுமுறையில் வீட்டிலிருந்த ஒரு சிறுமி விளையாடச் சென்றார். அவரை மதுரை மாவட்டம் கரடிக்கல்லை சேர்ந்த வேன் டிரைவர் பாலமுருகன்35, பாலியல் தொந்தரவு செய்தார். திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.
மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமரவேல்: பாலமுருகனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.