ADDED : பிப் 21, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேனி மாவட்டம் கம்பம் சூர்யா 34, மேலகூடலுார் சரவணன்37.
இவர்களிடம் 60 கிலோ கஞ்சாவை பெரியகுளம் தென்கரை போலீசார் 2013ல் பறிமுதல் செய்தனர். இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.

