ADDED : டிச 15, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : நெல்சாகுபடியில் விவசாயிகள் அதிக மகசூல் பெற மதுரை விவசாய கல்லுாரி தரமான விதைகளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிக மகசூல் தரும் நெல்ரக விதைகள் விற்பனைக்கு உள்ளன.அனைத்து விதைகளும் ஆதாரநிலை, உண்மை நிலை பிரிவுகளில் தரச்சான்று பெற்றவை.
இவை 30 கிலோ பைகளில் விற்பனைக்கு உள்ளன.
ஆடுதுறை 54, ஆடுதுறை 57, கோ 55 ரக விதைகளைப் பெற விவசாயிகள், 94420 54780 ல் தொடர்பு கொள்ளலாம் என, பேராசிரியர் ராகவன் தெரிவித்துள்ளார்.