sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' அரசியல் ஸ்டண்ட் செல்லுார் ராஜூ சொல்கிறார்

/

'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' அரசியல் ஸ்டண்ட் செல்லுார் ராஜூ சொல்கிறார்

'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' அரசியல் ஸ்டண்ட் செல்லுார் ராஜூ சொல்கிறார்

'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' அரசியல் ஸ்டண்ட் செல்லுார் ராஜூ சொல்கிறார்


ADDED : ஜூலை 27, 2025 04:11 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது தி.மு.க.,வின் அரசியல் ஸ்டண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.

மதுரை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கோரிக்கை மனுவை கலெக்டர் பிரவீன்குமாரிடம் செல்லுார் ராஜூ வழங்கிய பின் கூறியதாவது: வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் வந்து சேரும். நகரில் மேம்பாலம் கட்டுவதால் பனையூர் கால்வாய் உடைக்கப்பட்டதால் தண்ணீர் சேரவில்லை. முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் இந்நேரம் முடித்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. 88 மேல்நிலைத் தொட்டி மூலமாக தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலமாக சோதனை ஓட்டம் செய்தால் தான் அந்த திட்டம் முழுமையாகும். என் வீட்டிற்கு இப்போதுதான் பைப் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பல இடங்களில் சரியாக செய்யவில்லை.

வைகையில் கழிவுநீர் கலந்து அசுத்தமாக உள்ளது. குப்பை கொட்டப்படுகிறது. வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவின் போது மட்டும் ஆகாயத்தாமரை அகற்றப்படுகிறது. வைகை ஆற்றை சுத்தப்படுத்த அரசிடம் நிதி இல்லை என்றால் மத்திய அரசிடம் நிதி பெற்று செயல்படுத்த வேண்டும். மாநகராட்சிகளுக்கான தரவரிசை பட்டியலில் மதுரை 40வது இடத்தில் உள்ளது வேதனையை அளிக்கிறது. வரலாறு காணாத ஊழல் மதுரை மாநகராட்சியில் நடந்துள்ளது. 200 திருமண மண்டபங்களுக்கு வீட்டு வரி போடப்பட்டுள்ளது. 19 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி வரி ஊழல் குறித்து கமிஷனர் சித்ராவின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு 45 நாட்களுக்குள் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மனுக்கள் வாங்கி வருகிறார்கள். உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களை மீண்டும் விண்ணப்பம் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மனுவிற்கு தற்போது எப்படி உதவித்தொகை வழங்க முடியும். 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' என்பது தி.மு.க.,வின் அரசியல் ஸ்டண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us