நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்ய விஸ்வாலயம், ராஜயோக தியான நிலையம் சார்பில் ரக் ஷா பந்தன் விழா நடந்தது.
மதுரை கிளை பொறுப்பாளர் பிரம்மகுமாரி செந்தாமரை தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி, அண்ணாமலையார் தியான மண்டப கோயில் நிர்வாக அறங்காவலர் கோபிநாத், தே.மு..தி.க., பேரூர் செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்றவர்கள் தியான பயிற்சி பெற்று ராக்கி கயிறு அணிந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.