sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் பக்தர்கள் அருவருப்பு ; தங்கும் விடுதிகள் மீது பாயுமா நடவடிக்கை

/

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் பக்தர்கள் அருவருப்பு ; தங்கும் விடுதிகள் மீது பாயுமா நடவடிக்கை

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் பக்தர்கள் அருவருப்பு ; தங்கும் விடுதிகள் மீது பாயுமா நடவடிக்கை

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் பக்தர்கள் அருவருப்பு ; தங்கும் விடுதிகள் மீது பாயுமா நடவடிக்கை


ADDED : ஜன 28, 2024 04:46 AM

Google News

ADDED : ஜன 28, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தங்கும் விடுதிகளின் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அருவருப்பு அடைந்தனர். தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவார்கள். சமீபத்தில் ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க வந்த பிரதமர் மோடி முதலில் இந்த புனித அக்னி தீர்த்தத்தில் தான் நீராடினார்.

புனித அக்னி தீர்த்த கடலில் இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கலப்பதால் மாசு ஏற்படுகிறது. உயர்நீதிமன்றம் மதுரை கிளை கண்டித்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்திகரித்தது.

ஆனால் நேற்று நகராட்சி வாறுகாலில் ஏற்பட்ட அடைப்பால் கழிவு நீர் அக்னி தீர்த்த சாலையில் பெருக்கெடுத்து தீர்த்த கடலில் கலந்தது. இதனால் அக்னி தீர்த்தம் கடற்கரை முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அருவருப்பு அடைந்தனர்.

எனவே கழிவு நீரை திறந்து விடும் லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அக்னி தீர்த்தத்தில் சுகாதாரம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

---






      Dinamalar
      Follow us