sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதலாக 12 அறைகள் கட்ட ரூ.300 கோடிக்கு பரிந்துரை

/

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதலாக 12 அறைகள் கட்ட ரூ.300 கோடிக்கு பரிந்துரை

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதலாக 12 அறைகள் கட்ட ரூ.300 கோடிக்கு பரிந்துரை

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதலாக 12 அறைகள் கட்ட ரூ.300 கோடிக்கு பரிந்துரை

2


ADDED : ஏப் 15, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:30 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்போதைய மாவட்ட நீதிமன்ற வளாக கட்டடம் 1970 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு சிவில், கிரிமினல் உள்ளிட்ட பல்வேறு வகை வழக்குகளை விசாரிக்க 45 நீதிமன்ற அறைகள், அலுவலகங்கள் உள்ளன.

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 2023 மார்ச் 25 ல் நடந்த விழாவில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கட்டுமானப் பணி 2023 டிச.1 ல் துவங்கியது. எதிர்காலத்தில் கட்டட விரிவாக்கம் செய்ய வேண்டியதை கருத்தில் கொண்டு 10 மாடிகளை உருவாக்கும் வகையில் வலுவாக அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அடித்தள பகுதி, தரைத்தளம், 3 மாடிகள் அமைக்கப்படுகிறது. அடித்தளத்தில் 200 கார்கள், தரைத்தளத்தில் கார்கள், டூவீலர்கள் நிறுத்த இட வசதி, தபால் நிலையம், வங்கி, கேன்டீன், டிரைவர்களுக்கு ஓய்வறை வசதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு நுழைவு வாயில் வழியாக நீதிபதிகள், தெற்கு நுழைவு வாயிலில் மக்கள், கிழக்கு, மேற்கு நுழைவு வாயில் வழியாக வழக்கறிஞர்கள் சென்றுவர வசதி செய்யப்பட்டுள்ளது.

முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் தலா 6 நீதிமன்றங்கள் (மொத்தம் 18 ), அலுவலகங்கள், ஆவணங்களை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டக அறை, ஆஜர்படுத்தப்படும் கைதிகளை பாதுகாப்பதற்கான அறை உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி 'போக்சோ' வழக்குகளை விசாரிக்க முதல்தளத்தில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அறைகள் விரிவாக உள்ளதை பின்பற்றி, மாவட்ட நீதிமன்ற இப்புது கட்டடத்தில் ஒவ்வொரு நீதிமன்ற அறையும் 1200 சதுர அடியில் மைக், ஸ்பீக்கர், தீயணைப்பு கருவிகள் என நவீன வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி, நீதிமன்ற நுழைவு வாயிலுள்ள குளத்தை மேம்படுத்தி மரங்கள் நடுதல் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது 90 சதவீத பணி நிறைவுற்றுள்ளது.

2025 மே 31க்குள் பணி முழுமையடையும். புது கட்டடத்தில் மேலும் 12 நீதிமன்ற அறைகள் அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்ய திட்ட மதிப்பீடு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us