ADDED : ஆக 20, 2026 01:09 AM

அ நிறம் | அளவு
மதுரை: பள்ளி கல்வித்துறை சார்பில் மதுரையில் குறுவட்டம் அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் மேல அனுப்பானடி தாய்கலை சிலம்பம் மற்றும் கிராமிய கலைகூடத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல் பரிசை 11 மாணவியர், 13 மாணவர்கள், 2வது பரிசை தலா 4 மாணவ, மாணவியர் பெற்றனர். 3வது பரிசை தலா ஒரு மாணவர், மாணவி பெற்றனர். பயிற்சியாளர் திங்களரசன், ராணுவவீரர் பாலகுமார் சான்றிதழ் வழங்கினர்.
