/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
/
கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
ADDED : டிச 01, 2024 01:53 AM
கீழ்பவானி பாசனத்திற்கு
தண்ணீர் திறப்பு குறைப்பு
புன்செய்புளியம்பட்டி, டிச. 1-
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2,300 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், படிப்படியாக குறைக்கப்பட்டு, 1,000 கன அடி நீர் நேற்று காலை வெளியேற்றப்பட்டது.
அதேசமயம் அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 97.38 அடி; நீர் இருப்பு, 26.7 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு, 2,083 கன அடி நீர் வரத்தானது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். இந்நிலையில் இரவில் நீர் திறப்பு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.