ADDED : செப் 14, 2026 01:21 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி நிறுவனர்களில் ஒருவரான வி.கே.சி. நடராஜன் ஐ.ஏ.எஸ்., நினைவு நாளை முன்னிட்டு
கல்லுாரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. குடும்பத்தினர், உடற்கல்வியியல் கல்லுாரி நிறுவனர் பாண்டியன், முன்னாள் பொருளாளர் வனராஜா, முதல்வர் பால்ராஜ், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
