sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் இன்று கிரடாய் வீடு வீட்டடி மனை கண்காட்சி துவக்கம்

/

மதுரையில் இன்று கிரடாய் வீடு வீட்டடி மனை கண்காட்சி துவக்கம்

மதுரையில் இன்று கிரடாய் வீடு வீட்டடி மனை கண்காட்சி துவக்கம்

மதுரையில் இன்று கிரடாய் வீடு வீட்டடி மனை கண்காட்சி துவக்கம்


ADDED : ஜன 31, 2025 12:06 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில் வீடு, வீட்டடி மனைகள் கண்காட்சி (பேர்புரோ புராப்பட்டீ எக்ஸ்போ 2025) மதுரை தமுக்கம் கன்வென்ஷன் ஹாலில் இன்று (ஜன., 31) துவங்கி பிப்., 2 வரை நடக்கிறது.

ஏற்பாடுகளை 'கிரடாய்' மதுரை சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்துவிஜயன், செயலாளர் யோகேஷ், பொருளாளர் ஜெயகுமார் செய்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: கண்காட்சியை மதியம் 12:05 க்கு அமைச்சர் மூர்த்தி துவக்கி வைக்கிறார். ஒன்பதாவது ஆண்டாக நடக்கும் இக்கண்காட்சியில் வீட்டடி மனைகள் (பிளாட்கள்), வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும். 40 டெவலப்பர்கள், வங்கிகள், கட்டுமான பொருட்கள் நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

ரூ.19.9 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீடுகள், ரூ.3 லட்சம் முதல் பிளாட்களை தேர்வு செய்யலாம். வீடுகள், பிளாட்டுகளை நேரடியாக பார்வையிட வாகன வசதி உண்டு. வங்கிக் கடன் வசதி செய்யப்படும். மதுரை, சென்னை, கோவை புரமோட்டர்கள் பங்கேற்கின்றனர்.

பிப்., 1 மாலை 6:00 மணிக்கு 'பசுமை வீடுகள்' தலைப்பில் நடிகர் சரத்குமார் பேசுகிறார். பிப்., 2ல் 'கிரடாய்' விளம்பர துாதர் நடிகை சுகாசினி பங்கேற்கிறார். பார்வையாளர்களில் தினமும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாட் வழங்கப்படும். நிகழ்ச்சியை ஸ்டேட் வங்கி, அனுஜ் டைல்ஸ் இணைந்து வழங்குகின்றன. பார்வையாளர்கள் 'கியூஆர் கோடு' மூலம் முன்பதிவு செய்யும் வசதி உண்டு என்றனர்.

பிப்., 2 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us