sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீதிபதிக்கு பணி ஓய்வு   பாராட்டு விழா

/

நீதிபதிக்கு பணி ஓய்வு   பாராட்டு விழா

நீதிபதிக்கு பணி ஓய்வு   பாராட்டு விழா

நீதிபதிக்கு பணி ஓய்வு   பாராட்டு விழா


ADDED : ஜூன் 05, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.இளங்கோவனுக்கு நேற்று பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. அவரது பணிக்காலம் மற்றும் பிறப்பித்த முக்கிய தீர்ப்புகள் குறித்து பாராட்டி காணொலி மூலம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசினார்.

நீதிபதி ஜி.இளங்கோவன் பேசுகையில்'' நீதிபதிகள் தங்கள் மனசாட்சியைத் தவிர யாருக்காகவும், எதற்காகவும் பயம் கொள்ளக்கூடாது. ஒரு நபரின் உணர்வைத் தொடும் ஒரே பணி இதுதான்'' என்றார். நிர்வாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் காணொலி மூலம் பங்கேற்றார்.

ஓய்வு பெறும் நாளில் சம்பந்தப்பட்ட நீதிபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இடம்பெற்று காலையில் வழக்குகளை விசாரிப்பார். மாலையில் அங்கு பிரிவு உபசார விழா நடைபெறுவது வழக்கம்.

நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி 2021ல் ஓய்வு பெற்றபோது முதன்முறையாக மதுரைக் கிளையில் விழா நடந்தது. 2023ல் நீதிபதி ஆர்.தாரணி ஓய்வு பெற்றபோது மதுரையில் விழா நடந்தது.






      Dinamalar
      Follow us