/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை முதல் விதிப்படி தான் வேலை வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு
/
நாளை முதல் விதிப்படி தான் வேலை வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு
நாளை முதல் விதிப்படி தான் வேலை வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு
நாளை முதல் விதிப்படி தான் வேலை வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு
ADDED : பிப் 12, 2025 12:59 AM

மதுரை:''அதீத பணி அழுத்தம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் விதிப்படியே வேலை செய்வோம்,'' என, தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் கூறினார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
வருவாய்த் துறையில் போதிய அவகாசம் தராமல், பணிகளை உடனே முடிக்கும்படி கூறுகின்றனர். இதனால், அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது.
மேலும், அடிப்படை கட்டமைப்பும் இல்லை. எல்லாமே ஆன்லைனில் நடந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இணைய வசதி கிடையாது.
வருவாய் ஆய்வாளர் முதல் அனைவருமே, மொபைல் போனில் தான் செயல்படுகின்றனர். லேப்டாப், பிரின்டர், ஸ்கேனர், சர்வர், வைபை வசதி என, எதுவும் இல்லை. அரசிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, பிப்ரவரி, 13 முதல் தினமும் விதிப்படி வேலை என, காலை, 10:00 முதல் மாலை, 5:45 மணி வரையே பணியாற்றுவது என, முடிவு செய்து உள்ளோம்.
பிப்., 18 அன்று மாலை ஒரு மணிநேர வெளிநடப்பு செய்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

