ADDED : நவ 19, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: ஆலம்பட்டியில் கோயில் கும்பாபிஷேக பணியின் ஒரு பகுதியாக பீடங்களை புனரமைக்கும் பணி நடக்கிறது. அதே இடத்தில் தங்களுக்கும் பீடம் உள்ளது. அதையும் புனரமைக்க வேண்டும் என குறிப்பிட்ட சமுதாய மக்கள் கூற பிரச்னை ஏற்பட்டது. நேற்று ஆர்.டி.ஓ., சிவஜோதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக உத்தரவிட்டதால் மற்றொரு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்து திருமங்கலம் - ராஜபாளையம் ரோட்டில் 45 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

