sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குடிநீர் குழாய்களை அடைக்கும் வேர்கள்

/

குடிநீர் குழாய்களை அடைக்கும் வேர்கள்

குடிநீர் குழாய்களை அடைக்கும் வேர்கள்

குடிநீர் குழாய்களை அடைக்கும் வேர்கள்


ADDED : செப் 23, 2024 05:04 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: மதுரை மாநகராட்சி 94 வது வார்டு திருநகர் பகுதிகளில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் வேர்கள் அதிகளவில் அடைப்பதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும், வேர்களை அகற்றுவதற்கு பணியாளர்களும் அவதிப்படுகின்றனர்.

திருநகரில் அனைத்து தெருக்களிலும் குடிநீர் சப்ளை செய்வதற்காக பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் இருபுறமும் அதிகளவில் மரங்கள் உள்ளன.

இந்த மரங்களின் வேர்கள் பூமிக்கு அடியில் உள்ள குடிநீர் பிளாஸ்டிக் குழாய்களின் இணைப்பு வழியாக குழாய்களுக்குள் செல்கின்றன. அவை அடர்ந்து வளர்ந்து தண்ணீர் செல்வதை அடைக்கிறது.

இதனால் தண்ணீர் சப்ளை தடைபடுகிறது. பல இடங்களில் ஒருவாரமாக தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் சப்ளை இல்லாத பகுதிகளில் தோண்டி பார்த்தபோது குழாய்களுக்குள் ஆயிரக்கணக்கான வேர்கள் அடைத்து நிற்பது தெரியவருகிறது. தினமும் ஒரு பகுதியில் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பணியாளர்களும் தினம் அவதிக்குள்ளாகின்றனர்.

முல்லைப் பெரியாறு திட்டத்திற்காக தற்போது அப்பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் குழாய்கள் பதிக்கப்படுகிறது.

இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதனால் முல்லைப் பெரியாறு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us