ADDED : மே 05, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : ராயபுரம் ஜெர்மேனம்மாள் சர்ச் தங்கத் தேர் திருவிழா நடந்தது.
இவ்விழா ஏப்.25ல் முன்னாள் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஜெபமாலையுடன் சிறப்பு திருப்பலிகளை, எஸ்.வி.டி., வடக்கு வட்டார பங்கு பணியாளர்கள் உள்ளிட்டோர் நடத்தினர்.
நேற்று முன்தினம் (மே 3) இரவு மதுரை மரியன்னை ஏசு சபை குழும அதிபர், ஏசு சபை பணியாளர்கள் முன்னிலையில் வாண வேடிக்கையுடன் மின் அலங்கார சப்பரங்களை தொடர்ந்து அன்னையின் அலங்கார தங்கத்தேர் வீதி உலா வந்தது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (மே 5) காலை 7:00 மணிக்கு பாதிரியார் ஸ்டேனி தலைமையில் நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.