sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு

/

கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு

கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு

கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு

1


ADDED : மே 06, 2025 07:42 AM

Google News

ADDED : மே 06, 2025 07:42 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில், கிரானைட் குவாரி வழக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

அவர், 'கிரானைட் குவாரி விதிமீறலில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், எனக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. எனக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத நிலையில் உள்ளேன்' என, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார்.

சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லோகேஸ்வரன் நேற்று விசாரித்தார். சகாயம் ஆஜராகவில்லை. அரசு தரப்பு, 'சகாயம் சம்மனை பெறவில்லை. அவருக்கு பாதுகாப்பு அளிக்க தயார்' என, தெரிவித்தது.

நீதிபதி, 'சகாயத்திற்கு புதிதாக சம்மன் அனுப்பப்படுகிறது. அவர் காணொலியில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை, சென்னை முதன்மை மாவட்ட நீதிபதி செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 6க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us