ADDED : மார் 16, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை : எல்.ஐ.சி., ஊழியர்களுக்கு, 16 சதவீத ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக ஒரு லட்சம் ஊழியர்களும், 30,000 ஓய்வூதியர்களும் பயனடைவர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமாக எல்.ஐ.சி., நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில், 16 சதவீத உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனால் எல்.ஐ.சி.,க்கு ஆண்டுதோறும் 4000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இந்த ஊதிய உயர்வு அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஆகஸ்ட் 2022 முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

