/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு ஒத்திவைப்பு
/
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 04, 2025 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ைஸ போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர்.
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ.,கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. ஸ்ரீதர் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஆர்.சக்திவேல் ஏப்.9 க்கு ஒத்திவைத்தார்.

