ADDED : ஆக 22, 2025 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் இடிக்கப்பட்டதால் 4 வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகள் மரத்தடியில் படித்து வருகின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கணேசன்: கடந்த ஆண்டு பழுதடைந்த வகுப்பறைகளை இடித்து அப்புறப்படுத்த உத்தரவு கொடுத்து விட்டனர்.
பள்ளி விடுமுறைக்காலங்களில் அப்புறப்படுத்த கோரியபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆனால பள்ளி துவங்கியபின் இடித்தனர்.
மாற்று ஏற்பாடுகள் செய்து தரவில்லை. இந்நிலையில் எழுமலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் ஆய்வக பயிற்சி பெற இங்கு வருகின்றனர்.
இதனால் மேலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அரசு விரைவில் கட்டடங்கள் கட்டுவதற்கும், தற்காலிகமாக வகுப்பறை நடத்துவதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார்.