ADDED : மே 08, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், டி.எஸ்.பி., சந்திரசேகர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சுதாகரன், தீயணைப்பு அலுவலர் ஜெயராமன் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அவசர தேவைக்கு ஒருங்கிணைந்த மருத்துவ வசதிக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு, போலீஸ் துறைகளை '112'ல் தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர். வாகன படிக்கட்டுகள், இருக்கைகள், ஜன்னல்கள், அவசரகால கதவுகள், தீத்தடுப்பு கருவிகளை பரிசோதித்தனர்.

