sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை மிரட்டலால்       நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

/

கொலை மிரட்டலால்       நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கொலை மிரட்டலால்       நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கொலை மிரட்டலால்       நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


ADDED : ஏப் 26, 2025 04:22 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததால், நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை மகபூப்பாளையம் பாண்டியராஜன் 23, இவரது சகோதரர் ஜாக்கி (எ) பிரசாந்த் 22, பாண்டியராஜனின் மனைவி சரண்யா 20. இவர்கள் வில்லாபுரம் அருகே 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2024 ல் கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நேற்று முன்தினம் 3 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

பாண்டியராஜன், ஜாக்கி நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். நீதிபதியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார் ஜாக்கி. இதனால் நீதிமன்றத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரிலுள்ள அந்நீதிபதியின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us