ADDED : மார் 29, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அ.வல்லாளப்பட்டி அரியப்பன்பட்டி வடக்குவா செல்லியம்மன் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 15 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
நேற்று வெள்ளி மலையாண்டி கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பெண்கள் வெண்கல பானையில் பொங்கல் பொருட்களை சுமந்து சென்றும் ஒன்றரை கி.மீ., தொலைவில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.