/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விஜய் அரசியல் வருகை அ.தி.மு.க.,வுக்கு லாபம் செல்லுார் ராஜூவின் கணக்கு
/
விஜய் அரசியல் வருகை அ.தி.மு.க.,வுக்கு லாபம் செல்லுார் ராஜூவின் கணக்கு
விஜய் அரசியல் வருகை அ.தி.மு.க.,வுக்கு லாபம் செல்லுார் ராஜூவின் கணக்கு
விஜய் அரசியல் வருகை அ.தி.மு.க.,வுக்கு லாபம் செல்லுார் ராஜூவின் கணக்கு
ADDED : அக் 09, 2024 05:23 AM
மதுரை: ''நடிகர் விஜய் அரசியல் வருகையால் அ.தி.மு.க.,வுக்கு பயமில்லை. லாபம் தான்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் ஏற்படும். சென்னை ஏர் ேஷா நிகழ்ச்சியில் 5 பேர் இறந்ததற்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். 5 பேர் இறந்த நிலையில், தனது தந்தை பெயரில் ரூ.46 கோடிக்கு பூங்கா திறந்து முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். இது யாருக்கு தேவை. இங்கே குடிக்கவே கஞ்சி இல்லை. விலைவாசி, சொத்து வரி உயர்ந்துள்ளது. வரிக்குதிரையை காட்டிலும் வரி அதிகமாக உள்ளது.
தமிழக போலீசார் ஒரு கிராம்கூட போதைப்பொருளை பறிமுதல் செய்யவில்லை என கவர்னர் ரவி சொன்னது உண்மை. போதைப்பொருள் பயன்படுத்தியதாக 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய் இப்போது தான் மாநாடே நடத்த போகிறார். தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட பின் அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அதுபோன்ற எழுச்சி விஜய்க்கு இருக்குமா என தெரியாது. விஜய் நிறைய இளைஞர்களை வைத்துள்ளார். மாநாட்டில் கொள்கை அறிவித்த பின்னரே அவரை மக்கள் ஏற்பார்களா இல்லையா எனத் தெரியவரும்.
அ.தி.மு.க.,வுக்கு விஜயை பார்த்து பயமே இல்லை. அவரது கட்சியில் முழுக்க முழுக்க தி.மு.க.,வினர் தான் உள்ளனர். அதனால் தான் தி.மு.க., தலைவர்கள் விஜயை விமர்சிக்கிறார்கள்.
பாவம் சின்னபையன் விஜய். அவரும் வளர வேண்டாமா. நேற்று வரை சினிமாவில் ஆடிக்கொண்டிருந்த உதயநிதியை துணை முதல்வராக்குகிறீர்கள். அவர் என்ன தியாகம் செய்தார். சிறைக்கு சென்றாரா. விஜய் வருவதை ஏன் தடுக்கிறீர்கள். அவரால் எங்களுக்கு பாதிப்பே இல்லை. அ.தி.மு.க.,வுக்குதான் லாபம். தி.மு.க.விற்கு உழைக்கிற சில இளைஞர்களும் த.வெ.க-.வுக்கு சென்று விடுவார்கள். தி.மு.க.,வில் ஆர்.எஸ்.பாரதி போன்ற சீனியர் சிட்டிசன்கள் தான் இருப்பார்கள். இவ்வாறு கூறினார்.