ADDED : ஜூலை 18, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியில் ஜெகஜோதி அறக்கட்டளை சார்பில் 'இன்னுயிர் கொடுத்து இயற்கையை காப்போம்' கருத்தரங்கு நடந்தது.
தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் பிச்சை முன்னிலை வகித்தார். அய்யப்பன் வரவேற்றார். கிரட் அழகேசன், முன்னாள் யூனியன் சேர்மன் வனிதா, இயற்கை விவசாயிகள் கண்ணன், ஹக்கீம் பேசினர். விவசாயிகள் பெருமாள், ராசு, அழகர்சாமி, லோகநாதன், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். பொறுப்பாளர் அமிர்தம் நன்றி கூறினார்.