ADDED : ஏப் 27, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கே.கே.நகரில் சாரா பவுண்டேஷன் சார்பில், 'கல்வியிலும், வாழ்க்கையிலும் நுாலகத்தின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
சேர்மன் ராமமூர்த்தி தலைமை வகித்துப் பேசினார். நுாலகர் தினேஷ்குமார், ஓய்வு பெற்ற கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் உட்பட பலர் பேசினர். மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர் மனநிலையை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. குறும்பட இயக்குனர் கணேஷ் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார். நிறுவனர் சிந்துகணேஷ், பொறியாளர் பப்பிசவுமியா, சாரதா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
