தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சர்வர் முடக்கம்: விவசாயிகள் அவதி

சர்வர் முடக்கம்: விவசாயிகள் அவதி

சர்வர் முடக்கம்: விவசாயிகள் அவதி


ADDED : செப் 30, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: தமிழகத்தில் காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, பாசிப்பயறு, பல மாவட்டங்களில் நெல் முதலாம் பருவம் என லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய செப்.30 (இன்று) கடைசி. இந்நிலையில் கடந்த ௨ நாட்களாக இந்தியா முழுவதும் சர்வர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்திய கம்யூ., விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட தலைவர் சந்தனம் கூறுகையில் ''அரசு இ சேவை மையங்கள் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வந்த நிலையில் சர்வர் இயங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு செய்வதற்கான கடைசி நாளுக்கு முன்னதாக சர்வர் இயங்காமல் இருப்பது வாடிக்கையாகிறது. எனவே மத்திய அரசு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us