ADDED : ஜூலை 17, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகர் மக்கள் மன்றம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் செல்லா தலைமை வகித்தார். 19 ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 1200 பேருக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டுகள், உபகரணங்களை இலவசமாக வழங்கி வரும் ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றத் தலைவர் அய்யல்ராஜுக்கு கல்வி சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற போலீஸ் துணைகமிஷனர் மணிவண்ணன், எழுத்தாளர்கள் சேவியர் பிரிக்ஸ் ஒயிட், சத்தார், ஓய்வு பெற்ற மாநில கணக்கு தணிக்கையாளர்கள் ஸ்டாலின் சுப்பையா, தங்கபாண்டியன், திருநகர் நடைப்பயிற்சி நண்பர்கள் குழு உறுப்பினர்கள், ஜெயின்ஸ் குரூப் நண்பர்கள் கலந்து கொண்டனர்.