நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்' திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 46 லட்சத்தில் சிந்தாமணி சோணையாநகரில் தார் ரோடு, அய்யனார்புரத்தில் பயணிகள் நிழற் குடை கட்டடம் அமைக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், மாநகராட்சி கவுன்சிலர் கவிதா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார், இளங்கோ கலந்து கொண்டனர்.

