ADDED : ஏப் 23, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : எழுமலையைச் சேர்ந்த சன்னாசி என்பவரது தோட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உடையநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் ஆடுகளை கிடை போட்டுள்ளனர்.
இதில் மூன்று மாதங்கள் நிரம்பிய ஆட்டுக்குட்டிகள் 15 ஐ, மட்டும் தனியாக பட்டி போட்டு அடைத்து வைத்திருந்தனர். இந்த பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு குட்டிகளின் கழுத்துப்பகுதியில் கடித்ததில் 15 குட்டிகளும் பலியாகின. கால்நடைத்துறையினர், வருவாய்த்துறையினர் நாய்கள் கடித்ததால் பலியானதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.