ADDED : பிப் 21, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சந்தைத் திடலில் ஒருங்கிணைந்த போஸ்ட் ஆபீஸ் கட்ட 20 ஆண்டுகளுக்கு முன் தபால் துறையில் இடம் வாங்கிய கையோடு சுற்றுச்சுவர், கதவு அமைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் இன்று வரை இடம் காலியாகவே உள்ளது.
அதே போல் 20 ஆண்டுகளாக போஸ்ட் ஆபீஸ் பல இடங்களுக்கு நகர்ந்து தற்போது சங்கரமூர்த்தியா பிள்ளை தெருவில் இயங்குகிறது. அனைத்து வசதிகளுடன் கட்ட இடம் இருந்தும், நிதி ஒதுக்கீடு இல்லாமல் திட்டத்தையே கிடப்பில் போட்டுள்ளனர். விரைவில், நிதி ஒதுக்கீடு செய்து புதிய அலுவலகத்தை விரைவாக கட்ட வேண்டும்.

