ADDED : நவ 07, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய துணைத் தேர்தல் கமிஷனர் பானுபிரகாஷ் எத்துரு தலைமையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் திவாரி, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலை வகித்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கலெக்டர்கள் பிரவீன்குமார், சரவணன், ரஞ்ஜீத் சிங், சிம்ரன்ஜீத் சிங் காலோன், பொற்கொடி, சுகபுத்ரா, இளம்பகவத், சுகுமார், கமல் கிஷோர், அழகுமீனா, அருணா கலந்து கொண்டனர்.

