sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை விமான நிலையத்தில் பாம்புகள் பறிமுதல்

/

மதுரை விமான நிலையத்தில் பாம்புகள் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் பாம்புகள் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் பாம்புகள் பறிமுதல்


ADDED : மார் 21, 2025 04:23 AM

Google News

ADDED : மார் 21, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம், : இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள், பாம்புகள், பல்லிகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் மதுரை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். வேலுாரைச் சேர்ந்த ஒருவரின் உடமைகளை பரிசோதனை செய்த பொழுது, சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52, பல்லிகள் 4, பாம்புகள் 8 இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அப்பயணியிடம் விசாரித்த பொழுது, இலங்கையில் புறப்படும் பொழுது ஒரு நபர் தன்னிடம் இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும் இதை மதுரை விமான நிலைய வாசலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிவித்தார்.அப்பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் இந்திய வனத்துறையினரால் தடை செய்யப் பட்டவை. இதனால் அவற்றை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப் படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us