ADDED : மே 27, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சொக்கையா சுவாமி ஜீவசமாதி மடத்தில் வைகாசி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று மதியம் விநாயகர், முருகன், சொக்கையா சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. 18 வகையான திரவ அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் மணிகண்டன் தலைமையில் கமிட்டியினர் செய்திருந்தனர்.