sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்

/

குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்

குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்

குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்


ADDED : மே 18, 2025 03:04 AM

Google News

ADDED : மே 18, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவம் மே 31ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது.

அன்று உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்படும். இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடைபெறும். இந்நிகழ்ச்சி ஜூன் 8 வரை நடக்கும்.

விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர்.

பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 10 காலையில் உற்ஸவர் சுவாமி, தெய்வானை தங்கக்குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர்.

அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்.






      Dinamalar
      Follow us