/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்
/
குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்
ADDED : மே 18, 2025 03:04 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவம் மே 31ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது.
அன்று உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்படும். இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடைபெறும். இந்நிகழ்ச்சி ஜூன் 8 வரை நடக்கும்.
விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர்.
பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 10 காலையில் உற்ஸவர் சுவாமி, தெய்வானை தங்கக்குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர்.
அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்.