ADDED : ஜூன் 02, 2025 06:08 AM
n மதுரை அழகர்கோவில் ரோடு சர்க்யூட் ஹவுஸில் தங்கிய முதல்வர் நேற்று காலை 8:50 மணிக்கு பொதுக்குழு நடக்கும் இடமான உத்தங்குடிக்கு புறப்பட்டார்.
n புதுார், மூன்றுமாவடி, சர்வேயர்காலனி, மாட்டுத்தாவணி ரோடு என கூட்டம் நடக்கும் இடம் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து சென்றும், வாகனத்தில் பயணித்தும் ரோடு ஷோவில் பங்கேற்றார். அவருக்கு 50க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். மக்களிடம் மனுக்கள் பெற்றார்.
n கூட்டத்தில் 3400 பொதுக்குழு உறுப்பினர்கள், 4000 சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.
n பொதுக்குழுக் கூட்ட மேடையில் முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் மூர்த்தி வெள்ளிச் செங்கோல் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதிக்கும் வெள்ளிச் செங்கோல் வழங்கப்பட்டது.
n அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் சாப்பிட தனித்தனி உணவுக் கூடம், தொண்டர்கள், பார்வையாளர்களுக்கு தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 25 வகையான அசைவ, சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
n அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலினும் மதிய உணவு சாப்பிட்டார். மாலை 5:00 மணிக்கு விமானம் மூலம் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி சென்னை சென்றனர்.
n பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு 'ரிட்டன் கிப்ட்'டாக 'பேக்' வழங்கப்பட்டது.