நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதி நினைவு படிப்பகம் துவக்கப்பட்டது.
கிளைச் செயலாளர் ரவி வரவேற்றார். தலைவர் முருகன் தலைமை வகித்தார். மதுரை மண்டல பொதுச்செயலாளர் அல்போன்ஸ் மற்றும் மண்டல, கிளை நிர்வாகிகள், தி.மு.க., ஒன்றிய, நகர் செயலாளர்கள் பங்கேற்றனர்.

