ADDED : அக் 29, 2024 05:26 AM

மதுரை: சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 11வது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஏழு வயது பிரிவில் சிவகங்கை ரிஷி, திருநெல்வேலி தஸ்வின் தங்கப்பதக்கம் வென்றனர். 9 வயது பிரிவில் தோஷுத், 11 வயது பிரிவில் மதுரை ஸ்ரீநிதி, 13 வயது பிரிவில் கன்னியாகுமரி மகதி, துாத்துக்குடி பவன் , 14 வயது பிரிவில் கோவை தன்யா, 15 வயது பிரிவில் விருதுநகர் கிருத்திக், 16 வயது பிரிவில் ராமநாதபுரம் காளிராஜ், விழுப்புரம் அகல்யா தங்கப்பதக்கம் வென்றனர்.
போட்டியின் தலைமை நடுவராக சுரேஷ் குமார், நடுவர்களாக செந்தில், கார்த்திக் , கார்த்திகேயன், அங்குவேல், பால காமராஜன், தணிகை வேல், முத்துராஜா, அஜித்குமார், அட்சயா செயல்பட்டனர்.
சமயநல்லுார் ஊராட்சி தலைவர் மலையாளம், பரவை பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் பாலசுப்பிரமணியன், எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் காந்தி, மருதுபாண்டி சான்றிதழ் வழங்கினர்.