ADDED : மார் 18, 2026 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கே.எம்.ஆர். சர்வதேச பள்ளியில் சாய் பாரம்பரிய கலை, சிம்மயாழி சிலம்பம் சார்பில் மாநில சிலம்பப் போட்டி நடந்தது.
கே.எம்.ஆர். பள்ளி மாணவர்கள் தமிழினியன், சாய் ஸ்ரீ பிரணவன், பிரணவ், பிரணவ் நிதின், ஜெரின் ஜோவிதா, ரேபியதுல் ரிலா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
நகுல்பாண்டியன், ரித்வின், மது ஸ்ரீ, ஹரி சரண், சம்ருதீஸ்வரி, சஞ்சய் நாகராஜ், பிரசன்னா ஹஷ்வந்த் ஆகியோர் 2ம் பரிசு பெற்றனர். மிர்திக், பிரணவ் ராஜ், ஹேமாலிகா, யோகதாரா, ரக் ஷன், சத்ருபாலன், ஜெய்ஷ்ணா 3ம் பரிசு பெற்றனர். தாளாளர் கிருஷ்ணவேணி, முதல்வர்கள் விஜயா, சரஸ்வதி, தலைமை பயிற்சியாளர் ராஜா, பயிற்சியாளர்கள் சாந்தவேல், தினேஷ்குமார் பாராட்டினர்.

