ADDED : அக் 26, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி வேளச்சேரியில் நடந்தது.
இதில் மதுரை லீ சாட்லியர் பள்ளி மாணவி ரோஷிணி 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு, 200 மீட்டர் ஐ.எம்., பிரிவுகளில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நீச்சல் சங்க நிர்வாகிகள் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், செயலாளர் கண்ணன், பள்ளித்தலைவர் மைக்கேல், தலைமையாசிரியை ஸ்ரீலேகா பாராட்டினர்.