ADDED : மார் 23, 2026 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் சர்ச்சில், கத்தோலிக்க திருச்சபை தெற்கு மறை வட்ட அளவில் அதன் அதிபர் அமல்ராஜ் தலைமையில் ஒருங்கிணைந்த சிலுவைப் பாதை ஜெப வழிபாடு நடந்தது.
வளனார் சர்ச் பாதிரியார் ஜோசப் மேற்பார்வையில், கீழவாசல் துாய மரியன்னை சர்ச், பாஸ்டின் நகர் பவுல் சர்ச், ஐராவதநல்லுார், பழங்காநத்தம், திருநகர், திருமங்கலம், நாகமலை புதுக்கோட்டை, கருமாத்துார் பகுதிகளில் மறை வட்டத்துக்குட்பட்ட சர்ச்சுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். வளனார் சர்ச் உதவி பாதிரியார் ராஜா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

