ADDED : அக் 26, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே கொடிக்குளம் மேற்கே வயல்வெளிகளின் நடுவே இப்பகுதி மக்களின் குல தெய்வங்களான அங்காள ஈஸ்வரி, சுந்தர மூர்த்தி பெருமாள் கோயில்கள் உள்ளன.
அங்காள ஈஸ்வரி கோயிலில் ஒரு கலசத்துடன் கோபுரம், சுந்தரமூர்த்தி பெருமாள் கோயிலில் 3 கலசத்துடன் கோபுரம் எழுப்பி கடந்த 2020ல் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 4 கலசத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். வாலாந்துார் போலீசார் விசாரிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் அங்காளஈஸ்வரி கோயில் உண்டியலை உடைத்து திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.