ADDED : பிப் 08, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சிவகாசியிலிருந்து தேனிக்கு 2013 ஜூலை 2ல் ஒரு அரசு பஸ் சென்றது.
இரவு 9:00 மணிக்கு உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் வந்தபோது ராதாகிருஷ்ணன் 34,என்பவர் மறித்தார். 'ஹாரன்' ஒலி எழுப்பாமல் வந்ததாகக்கூறி செங்கலை வீசினார். பஸ் கண்ணாடி உடைந்தது. டிரைவர் ராமசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். ராதாகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து மதுரை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார்.

