sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி

/

 ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி

 ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி

 ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி


ADDED : நவ 18, 2025 04:22 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனுாருக்கு தினமும் காலையில் பாசஞ்சர் ரயில் செல்கிறது.

மதுரையில் காலை 8:25 மணிக்கு புறப்பட்டு, காலை 10:15 மணிக்குபோடியை அடைகிறது. கடந்த நவ.15 காலையில் புறப்பட்ட அந்த ரயில் பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே, சோனை கருப்பு என்பவரது மகள் சோனியா 17, என்பவர் மீது மோதியது.

தலையில் பலத்த காயமடைந்த சோனியாவுக்கு இடது கை துண்டானது. அக்கம் பக்கத்தவர்கள் ரயில்வே போலீசார் உதவியுடன், அப்பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us