/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புத்தகம் வாசிப்போருக்கு வெற்றி எளிது
/
புத்தகம் வாசிப்போருக்கு வெற்றி எளிது
ADDED : மார் 05, 2026 04:51 AM

திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் 2024ல் படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். தலைவர் பன்சிதர், முதல்வர் ஸ்ரீநிவாசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமசுப்பிரமணியன், முரளிதாஸ், டீன் கவிதா, தேர்வு கட்டுப்பட்டு அலுவலர் துரைசாமி பங்கேற்றனர். கல்லுாரிக் கல்வி மண்டல இணை இயக்குனர் கலைச்செல்வி 290 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அவர் பேசியதாவது: வாழ்க்கையை வெல்ல கல்வியே சிறந்த ஆயுதம். பட்டம் பெற்ற நீங்கள் தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் படிக்கும் காலங்களில் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிகரத்தை தொட்ட அனைவரும் கடினமாக உழைத்த துடன், தொடர்ந்து புத்தகங்களை வாசித்தும் வந்துள்ளனர்.
நீங்கள் உயரிய வேலைவாய்ப்புப் பெற, கடுமையாக உழைக்க வேண்டும். குறிக்கோளை வகுத்து, திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும் என்றார். பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

