sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மண் அள்ளும் இயந்திரம் ஏறியதில் சூப்பர்வைசர் நசுங்கி பலி

/

மண் அள்ளும் இயந்திரம் ஏறியதில் சூப்பர்வைசர் நசுங்கி பலி

மண் அள்ளும் இயந்திரம் ஏறியதில் சூப்பர்வைசர் நசுங்கி பலி

மண் அள்ளும் இயந்திரம் ஏறியதில் சூப்பர்வைசர் நசுங்கி பலி


ADDED : ஜூன் 07, 2025 06:50 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் பணியின்போது கவனக்குறைவாக மண் அள்ளும் இயந்திரத்தின் சக்கரம் ஏறியதில் சூப்பர்வைசர் கருப்புசாமி 28, பலியானார்.

மதுரை மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளத்தைச் சேர்ந்த கருப்புசாமி 28, சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாதவர்.

நேற்று காலை 9:30 மணியளவில் பணியின்போது வெயிலின் தாக்கத்தால் மண் அள்ளும் இயந்திரத்தின்கீழ் அமர்ந்து அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தார்.

இதை கவனிக்காத அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆப்பரேட்டர் ரகுமான், வாகனத்தை இயக்கினார். அப்போது அருகே திருமண மகாலில் இருந்தவர்கள் 'ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்' என கூச்சலிட்டனர். திருமண நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல் சத்தத்தால் ரகுமானுக்கும், கருப்புசாமிக்கும் கூச்சலிட்டது கேட்கவில்லை. மண் அள்ளும் இயந்திர வாகனம் ஏறியதில் கருப்புசாமி தலைநசுங்கி பலியானார்.

இதனால் அங்கிருந்து தப்பி ஓடிய ரகுமான், தெப்பக்குளம் ஸ்டேஷனில் சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us