நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் நிகழ்வு நடந்தது. சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார்.
திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன், இலக்கியம் தரும் தன்னம்பிக்கை எனும் தலைப்பில் பேசினார். புதுச்சேரி தாகூர் கல்லுாரி பேராசிரியர் விஜயராணி தொல்காப்பியத்தில் திணை பாகுபாடும், வாழ்வியலும் எனும் தலைப்பில் பேசினார்.
ஏற்பாடுகளை ஏ.பி.டி.துரைராஜ் மேல்நிலைப் பள்ளி, தமிழ்ச் சங்கம் செய்திருந்தன. ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.

