sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மேகதாது அணை பிரச்னைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் பி.ஆர். பாண்டியன் பேட்டி

/

 மேகதாது அணை பிரச்னைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் பி.ஆர். பாண்டியன் பேட்டி

 மேகதாது அணை பிரச்னைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் பி.ஆர். பாண்டியன் பேட்டி

 மேகதாது அணை பிரச்னைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் பி.ஆர். பாண்டியன் பேட்டி

1


ADDED : நவ 16, 2025 04:29 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:29 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.,) ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழக அரசு வழக்கு தொடராததே பிரச்னைக்கு காரணம்,'' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இந்தியாவில் பல்வேறு நடுவர் மன்றங்கள் இருந்தாலும், காவிரி நடுவர் மன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் பார்லிமென்டின் அனைத்து எம்.பி.,க்களும் ஓட்டளித்து பெரும்பான்மை அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு இணையான சட்ட அதிகாரங்களை வழங்கி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

நீர்ப்பாசன விவசாயி களின் உரிமையை பறிக்க முடியாது, கர்நாடக அரசு புதிய தடுப்பணை கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்றம் இறுதிதீர்ப்பு வழங்கியது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்த நிலையில் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. காவரி நடுவர் மன்றத்தை கண்காணித்து செயல்படுத்துவதற்காகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.

சட்டவிரோத மனு இந்தநிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் நடுவர் மன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்., ) தயார் செய்தது கர்நாடக அரசு. அதை மத்திய ஜல்சக்தி துறைக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அனுப்பியது. டி.பி.ஆர்., தயாரிக்க ஜல்ஜீவன் துறை ஒப்புதல் கொடுத்து அதை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியதும், ஆணையம் அதை ஏற்றுக் கொண்டதும் தவறு. எனவே காவிரி மேலாண்மை ஆணையம், ஜல்சக்தி துறைக்கு எதிராகத் தான் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆணையம் ஏற்றுக் கொண்டதே தவறு என ஆணையத்தை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருக்க வேண்டும்.

தமிழக அரசு அதைச் செய்யாததால், 'கர்நாடக அரசு கொடுத்த டி.பி.ஆர்., மனுவை ஆணையம் விசாரிக்கலாம். தமிழக அரசின் நியாயங்களை எடுத்துரைக்கலாம்' என உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்புக்கு சவாலாக உள்ளது. இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

முதல்வர் மவுனம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால் தான் ஆணையம் மனுவை ஏற்றுக் கொண்டது சரியா, தவறா என தெரிந்திருக்கும். அதற்கு பதிலாக கர்நாடக அரசின் மனுவை ரத்து செய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்தது தவறு. இதுகுறித்த முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார். அதுவே நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆணையத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. காவிரி உரிமைக்காக 50 ஆண்டு காலம் தமிழக விவசாயிகள் போராடி பெற்ற உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us