/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைக்கும்: அன்புமணி
/
மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைக்கும்: அன்புமணி
மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைக்கும்: அன்புமணி
மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைக்கும்: அன்புமணி
ADDED : மார் 02, 2026 07:26 AM
அவனியாபுரம்: மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும்,'' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தான் தமிழத்திற்கு நிறைய வளர்ச்சிகள் வரும். மத்திய அரசுடன் எதிர்ப்பு போக்கு இருந்தால் தமிழகத்திற்கு பிரச்னைகள் தான் அதிகம் ஏற்படும். மத்திய அரசை எதிரியாக நினைத்துக் கொண்டு, எதிர்த்துக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். அடிப்படை கட்டமைப்புகள் வேண்டும் என்றால் இணக்கமாக இருக்க வேண்டும். அதனால் தமிழக மக்கள் தே.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்க முடிவு செய்து விட்டனர்.
அவரவர் இயக்கத்திற்கும் அவரவர் கொள்கை கோட்பாட்டிற்கும் துரோகம் செய்பவர்கள் தான் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறார்கள். தி.மு.க., ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகாததனத்தால் துாய்மைப்பணியாளர்கள், டாக்டர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளை ஐந்தாண்டு காலம் நிறைவேற்றப்பட வில்லை.
முதல்வர் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.

