sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாவட்டத்தில் ஆசிரியர் தினவிழா

/

மாவட்டத்தில் ஆசிரியர் தினவிழா

மாவட்டத்தில் ஆசிரியர் தினவிழா

மாவட்டத்தில் ஆசிரியர் தினவிழா


ADDED : செப் 06, 2025 04:21 AM

Google News

ADDED : செப் 06, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பைகாராவில் ஆசிரியர் தினவிழா மதுரைக் கல்லுாரி பொருளாதாரத் துறை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், துாய்மை விழிகள் அறக்கட்டளையின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது. பொருளாளர் முத்து வரவேற்றார். பொருளாதாரத் துறைத் தலைவர் தீனதயாளன் தலைமை வகித்தார்.

ஓய்வு ஆசிரியர் நுார்ஜஹான் பேசுகையில், 'எல்லோரையும் உருவாக்கும் சிற்பி ஆசிரியர்கள். மரத்தின் வேர் போன்றவர்கள். வேர் பலமாக இருந்தால் தான், மரத்தில் பூக்கள் மணமுள்ளதாகவும் வசீகரிக்கும் வகையிலும் இருக்கும்' என்றார்.

நிறுவனர் வேல்முருகன், கல்லுாரி செயற்குழு உறுப்பினர் அமுதன், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் சதாசிவம், சங்கச் செயலாளர் முத்துப்பாண்டி பேசினர். துணைத் தலைவர் சந்திரலேகா நன்றி கூறினார். துணைச் செயலாளர் அசோக்குமார் ஏற்பாடு செய்தார்.

வாடிப்பட்டி: பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் செயலாளர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளி குழுத் தலைவர் தனபால் முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் எஸ்தார் டார்த்தி, பரமசிவன் நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us